Tuesday 10 May 2011

இந்திய அரசியலமைப்பு



இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.
இந்திய அரசியலமைப்பு சபையின் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார்.  
பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் இந்திய அரசியலமைப்பு சபையின்தலைவராக ( Chairman of the Constitute Assembly ) தேர்வு செய்யப்பட்டார்   
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராக ( Chairman of the Drafting Committee )   தேர்வு செய்யப்பட்டார்
இந்திய அரசியலமைப்பு உலகிலேயே  மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும்
இந்திய அரசியலமைப்பு "கூட்டாட்சி முறை' என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டபோது இருந்த சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை
395 சரத்துகள்,
8 பட்டியல்கள். 
தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை 
444 சரத்துகள்
12 பட்டியல்கள். 
இந்திய அரசியலமைப்பு  பகுதி நெகிழும் இயல்பும், பகுதி நெகிழா இயல்பும் கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையும் ஒற்றையாட்சி முறையும்  கொண்டுள்ளது  
மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அர சாங்கத்திற்கும் அதிகாரங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளன. 
அதிகாரங்கள் மத்திய பட்டியல் ( Central List )  மாநில பட்டியல் ( State List )  பொதுப் பட்டியல்                      ( Concurrent List )  என்ற மூன்று பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ளன. 
இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன.             ( பிரிவு 12 முதல் 35 வரை).
இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிபடுத்தும் கோட் பாடுகள் இடம் பெற்றிருக்கின்றன (பிரிவு 36 முதல் 51 வரை). 
அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் நீதித்துறை  பாதுகாக்கிறது.
பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், சாதி, மதம், நிறம், பாலினப் பாகுபாடு இன்றி தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். 

இங்கிலாந்து நாட்டிலிருந்து பெறப்பட்டவை 
1.
சட்டமியற்றும் முறை:
2.
சட்டத்தின் பணி
3.
ஒற்றைக் குடியுரிமை
4.
பாராளுமன்ற முறை அரசாங்கம்
5.
கேபினட் முறை அரசாங்கம்
6.
சட்டத்தில் இருந்து பாதுகாப்பு                                                                                                                                            7.மேல் சபையை விட கீழ் சபைக்கு அதிக அதிகாரம்
8.
பாராளுமன்றத்திற்கு பொறுப்பான அமைச் சர்கள்
அமெரிக்காவிலிருந்து   பெறப்பட்டவை:
1.
சுதந்திரமான நீதித்துறை
2.
நீதிப்புனராய்வு
3.
அடிப்படை உரிமைகள்
4.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்
5.
நீதிபதிகளை நீக்கும் முறை
6.
அரசியலமைப்பின் முன்னுரை
7.
துணை ஜனாதிபதியின் பொறுப்புகள்
8.
அரசியலமைப்பைத் திருத்தும் முறைகள்
9.
உச்சநீதிமன்றத்தின் அமைப்பும் இயக்கமும்
அயர்லாந்து நாட்டிலிருந்து பெறப்பட்டவை:
1.அரசின் வழிநெறிக் கோட்பாடுகள்
2.
ஜனாதிபதி முறை தேர்வு (தேர்தல்)
3.
ஜனாதிபதியால், ராஜ்யசபைக்கு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள்                                           4.பலமான மத்திய அரசாங்கம்
5.
எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வருவது 
ஜெர்மனி  நாட்டிலிருந்து பெறப்பட்டவை:
நெருக்கடிநிலையின் போது அடிப்படை உரிமைகள் நீக்கப்படுவது
ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்டவை:
பொதுபட்டியல் முறை
ரஷ்ய நாட்டிலிருந்துபெறப்பட்டவை:                                                                                                                               அடிப்படைக் கடமை கள்
கனடா நாட்டிலிருந்துபெறப்பட்டவை:                                                                                                                        மாநிலங்களுக்கு இடை யேயான இலவச வர்த்தக முறை
தென் ஆப்பிரிக்காவிலிருந்து  பெறப்பட்டவை:                                                                                         பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் சட்டத் திருத்த முறை



முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1951-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. 

அரசியலமைப்பு சட்டம் என்பது அரசிய லமைப்பில் அடங்கியுள்ள வகையங்களைக் குறிக்கும். 

இந்திய ஜனநாயகத்திற்கு அடிப்படையான பண்புகளை விளக்கும் பகுதியாக முகவுரை (Preamble) அமைகிறது. 
அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைப் முக வுரை எனும் கொள்கையை இந்திய அரசியல மைப்பு வல்லுநர்கள் எடுத்துக் கொண்டனர். 
இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சாரும்.
இந்திய அரசியலமைப்பின் திறவுக்கோல் ( Key to the Constitution )  , "இந்திய அரசியலமைப்பின் இதயம் ( Heart and Soul of the Constitution )  என்று போற்றப்படுவது முகவுரை 
இந்திய அரசியலமைப்பு முகவுரை இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது. 
1976-
ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதச்சார்பற்ற (Secular), ஒருமைப் பாடு (Integrity) எனும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன.


பகுதி-   1                                                                                                                                                                                          இந்திய அர சும் அதன் எல்லைகளும் பற்றி விளக்குகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகும்.                                                         மத்திய ஆட்சிப் பகுதி யான யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும்.                          ஒரு தேசிய தலைநகர்   பகுதி ( டெல்லி )யும் உள்ளன.
அடிப்படை உரிமைகள்
இந்திய அரசியலமைப்பு, தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது.
1978-
ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையானது அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு  தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் உள்ளன. 
1.
சமத்துவ உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18): 
2. சுதந்திரத்திற்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு 19-22)
3.
சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 23-24):                                                                            4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 25-28):
5.
பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு 29-30):
6.
அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு - 32):

இந்திய அரசியலமைப்பு ஐந்து வகையான நீதிப்பேராணையை அளிக்கிறது   :

1.
ஆட்கொணர் நீதிப்பேராணை  (Writ  of  Habeas Corpus) :
தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத் திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச் செய்வதாகும். 
2.
கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus):
ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். 
3.
தடை நீதிப்பேராணை (Writ of Prohibition): 
நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்ப தாகும்.
4. உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo warranto):
அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக் கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.
5. தடைமாற்று நீதிப்பேராணை (Writ of Certiorary):
நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச் செயல்முறைகளையும் ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச்  செய்வதாகும் 
அடிப்படை உரிமையை நெருக்கடி கால அறிவிப்பின் மூலம் குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும். 
அடிப்படைக் கடமைகள்
அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. 

இந்திய அரசிலமைப்பு பாராளுமன்ற  அமைப்பினை கொண்டுள்ளது. பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், மாநிலங்கள் அவை, மக்களவை அகியவற்றை உள்ளடக்கியது. 
மாநிலங்கள் அவை (Rajya Sabha)
மாநிலங்கள் அவை 250 உறுப் பினர்களைக் கொண்டது. இதில் 238  உறுப்பினர்கள் தேர்தல் முறையிலும் 12  உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால்  இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை இவற்றில் சிறந்த அறிவும் அல்லது அனு பவமும் கொண்டவர்களிலிருந்து நியமனம் செய்யபடுவர் . 
மாநிலங்கள் அவைக்கான தேர்தல் மறைமுகமானது. 
மாநிலங் களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பேரவை உறுப்பினர்களால்மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் தேர்வுசெயயபடுவர் 
மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண் டாண்டுகளுக்கு ஒரு முறை விலக காலியான இடங்களுக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும். 
உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.
இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர்  மாநிலங்கள் அவையின் தலைவராகப் பொறுப்பேற்பார். துணைக் குடியரசுத் தலைவர் இல்லாத காலங்களில் துணைத் தலைவர் மாநிலங்கள் அவைக்குத் தலைமை தாங்குவார்

மக்கள் அவை (Lok Sabha):
மக்கள் அவை 565-க்கு மிகாத உறுப்பினர் களைக் கொண்டது தற்போது மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர் 
525
உறுப்பினர்கள் மாநிலங்களிலிருந்தும், 18 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
ஆங்கிலோ - இந்திய சமூகத்தினருக்கு குடியரசுத் தலைவர் இருவரை நியமன உறுப்பினர்களாக நியமிப்பார்.
மக்கள் அவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலம் ஆகும். 
நெருக்கடி நிலைமை (Emergency) பிரகடனப் படுத்தும் காலங்களில் மக்கள் அவையின் காலத்தை ஓர் ஆண்டுக்கு மேற்படாமலும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு ஆறு மாதத்திற்கு மேற்படாமலும் சட்டத்தினால் நீட்டிக்கலாம். 
மக்கள் அவையின் தலைவர் (Speaker) நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். 

நாடாளுமன்றத்தின் பணிகள்(Functions of Parliament):
சட்டம் இயற்றுதல், நிர்வாக மேற்பார்வை, வரவு - செலவு அறிக்கை நிறைவேற்றுதல், பொது மக்களின் குறைகளைப் போக்குதல், முன்னேற்றத் திட்டங்களை உருவாக்குதல், பன்னாட்டு உறவுகளைப் பராமரித்தல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.
சட்டமியற்ற மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். 
நிதி மசோதா மக்கள் அவையில் மட்டுமே கொண்டுவர முடியும் நிதி மசோதவினை பொறுத்தவரை மக்கள் அவையின் ஒப்புதலே முடிவானது. 
அதிகபட்சமாக நிதி மசோதாக்கள் மாநில அவையினால் 14 நாட்கள் மட்டுமே தாமதப்படுத்த இயலும் 14 நாட்களுக்குள்  எவ்வித முடிவினையும் மாநில அவை தெரிவிக்காவிடில் அம்மசோதா நிறைவேறியதாக கருதப்படும் 

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் (Sessions of Parliament) :
அரசியலமைப்பின்படி நாடாளுமன்றம் ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறை கூட்டப்பட வேண்டும். 
இரண்டு கூட்டங்களுக்கும் இடையில் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இடைவெளி இருக்கலாம்  
நாடாளுமன்றம் ஆண்டிற்கு மூன்று முறை கூட்டப்படுகிறது. 
கூட்டத் தொடர்கள் : 
1. வரவு - செலவு அறிக்கை கூட்டத் தொடர் - பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கூடும்.
2.
பருவக்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக ஜூலை மாதத்தில் கூடும்.
3.
குளிர்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக நவம்பர் மாதத்தில் நடைபெறும்.

குடியரசுத் தலைவர்
இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார். 
இவர் இந்திய அரசின் தலைவரும் ஆவார்
பெயரளவிலான தலைவர் (Nominal Chief),                                                                                                        சட்டப்படியான தலைவர் (Legal Chief),                                                                                                                                   முப்படைகளின் தலைவர்                                                                                                                                                                  பதவிக்காலம் 5 ஆண்டுகள் 
தேர்வுக் குழுமம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படு கிறார். 
மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்து எடுப்பார்கள்.                             ஒற்றை மாற்று வாக்கு எனப்படும் ரகசியத் தேர்வு முறையில் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். 
குடியரசுத் தலைவர் தேர்வு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்படும்
ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் பொதுவாக குடியரசுத் தலைவர் பதவிக்கு இரண்டு முறைக்கு மேல் போட்டிடுவது இல்லை 
குடியரசுத் தலைவர் தனது ராஜினாமாவை துணைக் குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டும்.
குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய குற்ற விசாரணை முறை மூலம் இதைச் செய்யலாம். 
குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணைக் கான முன்னறிவிப்பு கால அவகாசம் 14 நாட்களாகும். 
குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப் பட்டு குற்ற விசாரணை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

1.
நிர்வாக அதிகாரங்கள்
மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் உள்ளது. 
மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங் களுக்கு குடியரசுத்தலைவரின் பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன. 
பிரதமரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவரும் அவரே, பிரதமரின் ஆலோசனைப்படி மற்ற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். 
இந்தியத் தலைமை வழக்கறிஞர், இந்திய தலைமை கணக்காய்வர், தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் தூதுவர்கள், மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய தேர்வாணையத்தின் தலைவர், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் போன்ற முக்கியமான பதவிகளில் உரிய நபர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். 

2.
சட்டமன்ற அதிகாரங்கள் :
பாராளுமன்றத்தைக் கூட்டும் உரிமை பெற்றவர் குடியரசுத் தலைவர் ஆவார். 
பாராளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையையோ ஒத்திப்போடவோ அல்லது கூட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவோ அதிகாரம் பெற்றவர் 
மாநிலங்களவை 12 உறுப்பினர்களை நியமனம் செய்யவும், மக்களவையில் 2 ஆங்கிலோ - இந்திய இனத்தினரை நியமனம் செய்யவும் அதிகாரம்  உண்டு. 
பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. 
 
குடியரசுத் தலைவர் அங்கீகாரம் இல்லாது எந்த மசோதாவும் சட்டமாகாது. 
பாராளுமன்றம் கூடாதபோது அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு .

3.
நிதி தொடர்பான அதிகாரங்கள்
நிதி மசோதா பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் முன் அனுமதி  பெற்றுதான் தாக்கல் செய்ய  முடியும்  
இந்திய அரசின் எதிர்பாராத செலவு (Contingency Fund) நிதிக்குப் பொறுப்பானவர் குடியரசுத் தலைவர். 
இந்தியாவின் நிதி ஆணையகத்தை (Finance Commission) அமைக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.

4.
நீதி தொடர்பான அதிகாரங்கள் :
குற்றவாளிகள் எவரையும் மன்னிக்கவோ தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக் கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு, மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றவர்  
அரசியலமைப்பு சட்டங்கள் பற்றிய சந்தேகம் குடியரசுத் தலைவருக்கு ஏற்பட்டால் அவர் உச்சநீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெறலாம் .

5.
நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள்:
போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கியோரின் தேசிய நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.
மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்குமுறை செயலற்றுப் போகும் போது மாநில நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.
நிதி நிலை மிகவும் மோசமாகும் போது குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

துணைக் குடியரசுத் தலைவர்
துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார். 
ராஜ்யசபாவின் தலைவராக செயல்படுவார் 
குடியரசுத் தலைவர் இறக்க நேரிட்டாலோ, அவரது பதவி காலியாகும் போதோ, நீக்கப்பட்டாலோ, அப் பதவி காலியாக இருக்கும் போதோகுடியரசுத் தலைவரின் பணிகளை  துணைக் குடியரசுத் தலைவர் கவனிப்பார்
பாராளுமன்றத்தின் இரண்டு அவை உறுப்பினர் களைக் கொண்ட வாக்காளர் குழுமம் (Electoral College) மூலமாக, விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒற்றை வாக்குமுறை மூலமாக, துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார். 
துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்காக ஒருவர்  எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டி இடலாம். 
துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார்
துணைக் குடியரசுத் தலைவர்மீது குற்ற விசாரணை ஒன்றை மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்து மக்களவையிலும் அது நிறைவேற்றப்பட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம். 
துணைக் குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க வேண்டும். 
மாநிலங்களவையில் ஒட்டெடுப்பின் போது சமநிலை ஏற்படும் போது மட்டும், ஒட்டுப் போடும் உரிமை பெற்றவர் துணைக் குடியரசுத் தலைவர்.

பிரதமர்
பிரதமர் அரசாங்கத்தின் செயல்பாட்டுத் தலைவர் மற்றும் நிர்வாகத் துறையின் தலைவர். 
குடியரசுத் தலைவர் மக்கள் அவையில் பெரும்பான்மையான உறுப்பினர் கொண்ட கட்சியின் தலைவரை அழைத்து பிரதமராக நியமித்து அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார்.

அமைச்சரவை
அமைச்சர்கள், மக்கள் அவைக்கு தனித்தனி யாகவும், கூட்டமாகவும் பொறுப்புடையவர்கள்.

அமைச்சர்கள்  1. காபினெட் அமைச்சர்கள் 2. மாநில அமைச் சர்கள் 3. துணை அமைச்சர்கள்  மூன்றாக வகைபடுத்தபடுகின்றனர்  


மாநிலச் சட்ட மேலவை
மாநிலச் சட்ட மேலவை ஓரவை அல்லது ஈரவையைக் கொண்டிருக்கலாம். அவை சட்டப் பேரவை அல்லது விதான் சபா என்றும் சட்டமேலவை அல்லது விதான் பரிஷத் என்றும் அழைக்கப்படுகின்றன. 
ஒரு மாநிலத்தின் சட்ட மேலவையை உருவாக்க அல்லது நீக்க அரசியலமைப்பின் அங்கம் 169-ன் கீழ் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தைச் சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்ற வேண்டும். 

மாநிலச் சட்ட மன்றம் 
சட்டமன்றம்  ஓர் உண்மையான மக்கள் அவையாகும். 
சட்டமன்றம் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மக்கள் தொகையைச் சார்ந்து வேறுபடுகின்றது.சட்டப்பேரவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 500-க்கு மிகையின்றியும் குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை 60-க்குக் குறைவின்றியும் இருத்தல் வேண்டும்.       சிக்கிம் மாநிலச் சட்டப்பேரவை  30 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளது.                                                                                                                                                                        சட்டமன்றத்தின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள்  ஆனால்சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படலாம். நாட்டில் நெருக்கடி நிலை நிலவும் பட்சத்தில் அதன் ஆயுட்காலம், நாடாளுமன்றச் சட்டத்தினால் நீட்டிக்கப் படலாம்.
வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில், சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து அதன் உறுப்பினர்கள் மக்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்  
ஆங்கிலோ - இந்தியர் சமூகத்தினர் சட்டப் பேரவையில் பிரதிநிதித்துவம் பெறத்தவறியதாக மாநில ஆளுனர் கருதினால்  ஆங்கிலோ இந்தியர் ஒருவரை  சட்டப் பேரவையில் உறுப்பினராக நியமனம் செய்கிறார் 
சட்டமன்ற உறுப்பினராக இருக்க குறைந்தது 25 வயது பூர்தியடைந்திருக்க வேண்டும். 
சட்டப் பேரவையின் அனுமதியின்றி அதன் கூட்டங்களில் அறுபது நாட்களுக்குப் பங்கேற்காத ஓர் உறுப்பினரின் பதவியைப் பேரவை பறிக்கலாம். 

சபாநாயகர்
சபாநாயகர் சட்டமன்ற உர்ப்பினர்களால்  தேர்வு செய்யபடுகிறார்  

ஆளுநர்
ஆளுநர் குடியரசு தலைவரால் நியமனம் செய்யபடுகிறார் ஆளுநராக நியமனம் செய்யப்படுவதற்கு முன் னர் மாநில முதலமைச்சர் கலந்தாலோசிக்கப் படுகின்றார்.மாநிலத்தின் பெயரளவிலான  தலைவராக ஆளுநர் உள்ளார்
மாநில ஆளுநரின் பதவிக்காலம் பொதுவாக ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அவர் குடியரசுத் தலைவர் மனநிறைவைப் பெற்றுள்ள காலம் வரை பதவி வகிக்கின்றார். 
மாநில அரசாங்கத்தின் செயலாட்சி அதிகாரங் கள் அனைத்தும் ஆளுநரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. 
சட்டசபையில் பெரும்பான்மை பெற்ற கட்சியால் தேர்வு செய்யபடுபவரை முதலமைச்சராக பதவியில் அமர்த்துகின்றார். முதலமைச்சரின் அறிவுரையின்படி ஏனைய அமைச்சர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்படுகின்றனர். 
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட நீதி பதிகள், தலைமை வழக்குரைஞர் ஆகியோரையும் ஆளுநரே நியமனம் செய்கின்றார். 
ஆளுநரின் கலந்தாலோசிப்புடன் மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.                                                                                                                                                                           சட்ட மேலவை உறுப்பினர்களுள் ஆறில் ஒரு பங்கினரையும் சட்டப் பேரவையில் ஆங்கிலோ இந்தியச் சமுதாயத்தைச் சார்ந்த ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களையும் ஆளுநர் நியமிக்கிறார். 
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும்  நியமனம் செய்கின்றார். 
ஒரு நபரின் தண்டனையைக் குறைக்கவும் அல் லது அதை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கவும் அல்லது குற்ற மன்னிப்புகள் வழங்க வும் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனையை மன்னிக்கும் அதிகாரத்தை அவர் பெற்றிருக்கவில்லை.

முதலமைச்சர்
அமைச்சரவையின் தலைவர் முதலமைச்சர். 
மாநிலத்தின் பெயரளவிலான ஒரு தலைவராக ஆளுநர் உள்ளார். உண்மை செயலாக்க அதிகாரங்கள் யாவும் முதலமைச்சரின் தலைமையிலான ஓர் அமைச்சர் குழுவினால் செயல்படுத்தப்படுகின்றன. 
அரசியலமைப்பின் 164-ம் அங்கத்தின் கீழ் முதலமைச்சரையும் முதலமைச்சரின் பரிந்துரை மீது அனைத்து அமைச்சர்களையும் ஆளுநர் நியமனம் செய்கின்றார். 
முதலமைச்சரின் தலையாய பணி தனது அமைச் சரவையை அமைப்பதாகும். 
முதலமைச்சரின் நம்பிக்கையை ஓர் அமைச்சர் இழப்பாராயின், அவர் பதவி விலக வேண்டும்.

அமைச்சர்குழு
சட்டமன்ற உறுப்பினரல்லாத ஒருவரும் அமைச் சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் ஆறுமாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அமைச்சர் குழு சட்டமன்றதிக்கு கட்டுப்பட்டது 

உச்சநீதிமன்றம்
இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் இருபத்தைந்து நீதிபதிகளையும் கொண்டுள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை ஒரு தலைமை நீதிபதி மற்றும் முப்பது  நீதிபதிகளை கொண்டதாக உயர்த்தபட்டுள்ளது
தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். 
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அறுபத்தைந்து வயது  வரை பதவி வகிப் பார்கள். 
                                                                                                                                                                                                               
 பஞ்சாயத்துராஜ்
பஞ்சாயத்து ராஜ் 1959-ம் ஆண்டு அக் டோபர் திங்கள் 2-ம் நாளன்று பண்டித ஜவ ஹர்லால் நேருவினால் துவக்கபட்டதுமுதன் முதலில்பஞ்சாயத்து ராஜ் அறிமுகம்   செய்த  மாநிலம்   ராஜஸ்தான்  
அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தங்கள் 1992-ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இயற்றப்பட்டன. 
73-
வது  சட்ட திருத்தம் பஞ்சாயத் ராஜ் பற்றியது இந்த திருத்தத்தின்கீழ் 11-வது இணைப்புப் பட்டியல் 29 வகை அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றின்மீது முழுமையான அதிகாரத்தைப் பஞ்சாயத்துக்கள் பெற்றுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம சபைக்கும் மற்றும் கிராமம் இடைப்பட்ட மற்றும் மாவட்ட நிலைகளில் பஞ்சாயத்துக்கள் அமையப்பெறவும் 73-வது திருத்தம் வகை செய்கின்றது.
74-வது  சட்ட திருத்தம் நகர் பலிகா  பற்றியது 12-வது இணைப்புப் பட்டியல் 18 வகை அதி காரங்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களைக் கொண்டுள்ளன. 

அவசர நிலைகள்
இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று

1.
தேசிய நெருக்கடி நிலை  சட்ட பிரிவு 352

2.
மாநிலத்தில்  ஆட்சி - சட்ட பிரிவு356

3.
நிதி நெருக்கடி நிலை - சட்ட பிரிவு  360

 
 தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் சட்ட பிரிவு -  352

தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - குடியரசுத் தலைவர்

தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்

1.
போர்

2.
போர் மூலம் அபாயம்

3.
வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு

4.
வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்

5.
உள்நாட்டுக் கலவரம்
  தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.

6
மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர்குடியரசுத் தலைவர்

மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை குறிக்கும் சட்ட பிரிவு -  356
முதன்முதலில் குடியரசுத் தலைவர்ஆட்சி அமலான வருடம் 1951
முதன்முதலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்
இந்தியாவில் இதுவரை குடியரசுத் தலைவர்ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்
இந்தியாவில் அதிகமுறை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி
நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் சட்ட பிரிவு -  360
நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்
நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.
இதுவரை நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.
நிதி நெருக்கடி நிலையின் போது                                                                                                                                                    1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
2.
மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
நெருக்கடி நிலையின்போது பிரிவு 21 இல் உள்ள உரிமைகள் பாதிக்கப்படாது    

நிதி ஆணையகம்
நிதி குழுவினை நியமனம் செய்பவர்  - ஜனாதிபதி
நிதிகுழுவின்  பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
நிதி குழுவின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்  தலைவர்உறுபினர்கள்நபர்கள் 
நிதி குழு  என்பது  இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.
முதல் நிதி குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951 - ஜவர்ஹர்லால் நேரு காலத்தில் அமைக்கபட்டது 
முதல் நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. நிகோய்
பத்தாவது நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. பந்த்
பதினோராவது நிதி ஆணையகத்தின் தலைவர் பேராசிரியர் - .எம். குஸ்ரோ
நிதிக்குழுவின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையகம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.
தேர்தல் ஆணையகம் என்பது மூன்று நபர்கள் கொண்ட ஒரு குழு  ஆகும்.
தேர்தல் ஆணையகத்தின் மூன்று ஆணையர் களுக்கும்  அதிகாரங்கள் சமமாக வழங்கப்பட்டு உள்ளது . கருத்து வேறுபாடு ஏற்படும்  பொழுது பெரும்பான்மையோரின் முடிவு ஏற்றுக்கொள்ளபடும். 
தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் சட்ட பிரிவு - 324 (5)
தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
தேர்தல் ஆணையகத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.
குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்துவது  தேர்தல் ஆணையகம்.
தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்
புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையகம். 

திட்டக்குழு
திட்டக்குழுவின் தலைவர் - பிரதமர்
திட்டக்குழுவின் உறுப்பினர்கள் - மாநில முதலமைச்சர்கள்
திட்டக்குழு என்பது - ஒரு ஆலோசனைக் குழு
தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா
ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு - திட்டக்குழு

தேசிய வளர்ச்சிக்குழு
தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் - பிரதமர்
ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு - தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.

இணைப்புப் பட்டியல்கள் 
அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 . தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும்
1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன. 

பட்டியல் -1

இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் ( டெல்லிஇந்தியாவில் உள்ளன.

பட்டியல் -2

இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியர சுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

பட்டியல் -3

பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.

பட்டியல் -4

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது  மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது

பட்டியல் -5

தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. பாராளுமன்றத்தில் எளிதான மெஜாரிட்டி மூலம் இப்பட்டியல்களைத் திருத்த இயலும் 
பட்டியல் -6

அசாம், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான மெஜாரிட்டி மூலம் பாராளுமன்றத்தில் திருத்தப்படலாம்.

பட்டியல் -7

மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.

மத்தியப் பட்டியல் ( 97 பட்டியல் )
இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 97 துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன.

மாநிலப்பட்டியல் ( 66 பட்டியல் )

இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. விவசாய வருமானவரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 64 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள்.

பொதுப்பட்டியல் ( 49 பட்டியல் )

இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் தற்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 49. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 49 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.

பட்டியல் -8

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும். அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழி களாகும். 2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பட்டியல் -9 :

நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற் பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது ஒன்பதா வது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக் கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

பட்டியல் -10 :

கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அர சியலமைப்பில் இணைக்கப்பட்டது. 
 
பட்டியல் -11 :

பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய ஆட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல் -12:

இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்து களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது . 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன.

இந்திய மொழிகள்

இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.
இந்திய அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆகும்.                                                                                                                                                                                          இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மொழிவாரி மாநிலமாக, முதன்முதலாக அமைக்கப்பட்ட மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இது 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

No comments:

Post a Comment